Exodus Overview

யாத்திராகமம் ஒரு பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKGBHNFWgv3QVl5P_BSxdVXMkGFzVF8VcKqDVTQJGlH33sO85_B-hkw_YT2xnSAR4g9sifWQECypztOmA67124HcuPW1eu_8NqoW-MJ5r6boSxQTCobYiuSsjlt-oeK2WhSBl0r2jLPV3p/s320/2-+%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AE%25AE%25E0%25AF%258D+-+%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2588.jpg

 

Power Point PPTX - பதிவிறக்கம் செய்ய மேலுள்ள படத்தின் மீது Click செய்யவும்

 

யாத்திராகமம்

வேதாகமத்தின் இரண்டாவது புத்தகம்

(Pastor. Gabriel Thomasraj)

 

யாத்திராகமத்தின் அர்த்தம்

·        கிரேக்க மொழியில் “Exodos” என்ற வார்த்தையில் இருந்து ஆங்கிலத்தில் இது “Exodus” என்று அழைக்கப்படுகிறது.

·        இதன் அர்த்தம் - “பாதையில் பயணித்தல்

·        இஸ்ரவேல் ஜனங்களின் மிகப்பெரிய இடப்பெயர்வு பயணத்தை முன்னிட்டே இந்த பெயர் இந்த புத்தகத்திற்கு வந்தது.

 

ஆக்கியோன்

·        இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை.

·        வேதாகமத்தின் வேறு புத்தகங்களில் இது “மோசேயின் நியாயப்பிரமாணம்” என்று குறிப்பிடப்படுகிறது (யோசுவா 1:7, 1 இரா 2:4). இதனால் யாத்திராகமத்தையும் அதிலே இடம்பெற்றுள்ள கற்பனைகளையும் மோசே எழுதினார் என்பது புலனாகிறது.

·        மாற்கு 7:10-ல் இயேசு, “மோசே சொல்லியிருக்கிறாரே” என்று யாத் 20:12, 21:17 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டியதன் மூலம் இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்கிற புரிதலை உறுதிப்படுத்துகிறார்.

·        எகிப்தின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு அங்கு மோசே பெற்ற கல்வியறிவு இவற்றை எழுதுவதற்கான வாய்ப்பையும், திறமையையும் நிச்சயமாய் கொடுத்திருக்கும் (அப். 7:22)

 

தகவல்கள்

·        கி.மு.1445 முதல் கி.மு.1404 காலப்பகுதியில் எழுதப்பட்டது.

·        40 அதிகாரங்களைக் கொண்டது.

·        1213 வசனங்களைக் கொண்டது.

 

வரலாற்றுக் காலவரிசை

 

·        ஆதியாகமத்தில் ஆரம்பித்த யூத மக்களின் வாழ்க்கை சம்பவங்களை, சுமார் 400 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் யாத்திராகமம் தொடர்ந்து சொல்லுகிறது.

·        யாத்.12:40 - எபிரேயர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலம் 430 ஆண்டுகள்.

·        இந்த காலக்கட்டத்தில் யோசேப்பும், அவனது சகோதரர்களும், அவர்களுக்கு ஆதரவாயிருந்த பார்வோனும் மரித்துப்போயிருந்தார்கள்.

·        மோசேயின் பிறப்பிற்கு (கி.மு.1526) சற்று முன்னான காலத்திலிருந்து வனாந்திரத்தில் ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்ட (கி.மு.1445) காலம் வரையுள்ள சுமார் 80 ஆண்டுகள் கால வரலாற்றை இந்த புத்தகம் விபரிக்கிறது.

·        1 இரா.6:1-ல் காண்கிறபடி இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 ஆண்டுகளின் பின்னர் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தை கட்டினான்.

 

யாத்திராகமத்தின் உள்ளடக்கம்

·        விரோத மனநிலை கொண்ட எகிப்தில் வாழும் இஸ்ரவேலர் (அதிகாரம் 1)

·        மோசேயின் பிறப்பும் ஆச்சரியமான வாழ்வும் (2:1-2:10)

·        மோசே ஏற்றுக்கொள்ளபடாமையும், மீதியான் தேசத்திற்கு தப்பித்தலும் (2:11-2:21)

·        எரியும் செடியிலிருந்து தேவன் மோசேயை அழைத்தல் (3:1-4:17)

·        மோசே எகிப்திற்கு திரும்பி தன்னை வெளிப்படுத்துதல் (4:18-7:13)

·        எகிப்தின் 10 வாதைகள் (7:14-11:10)

·        பஸ்கா (12:1-13:14)

·        யாத்திரையும், எகிப்தியரிடமிருந்து தப்பித்தலும் (13:15-13:22)

·        இஸ்ரவேலரின் யாத்திரை (14:1-18:27)

·        சீனாயில் உடன்படிக்கை, பத்து கற்பனைகள் வழங்கப்படுதலும் (19:1-24:18)

·        ஜனங்களின் துரோகம், உடன்படிக்கையின் புதுப்பித்தலும் (32:1-35:3)

·        ஆசரிப்புக்கூடாரத்திற்கான அறிவுறுத்தல்களும் அதன் நிறைவேற்றமும் (25:1-31:18/35:4-40:38)

 

 

புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

·        ஒரு முழு தேசமே சேர்ந்து பயணப்பட்ட மிகக் கடினமான பயணம்

·        ஒரு இரவிலே தேவன் எகிப்திலிருந்து சரீர பிரகாரமாக இஸ்ரவேலரை வெளியேற்றினார். ஆனால் அவர்கள் மனதிலிருந்து எகிப்தை வெளியேற்ற 40 ஆண்டுகள் தேவைப்பட்டது.

1. ராமசேஸ்

·        1வது மாதத்தின் 15ம் நாளில் எகிப்திலுள்ள ராமசேசை விட்டுக் சுக்கோத்துக்குப் போனார்கள் (யாத் 12:37). 430 ஆண்டுகால எகிப்திய அடிமை வாழ்வு முடிவுக்கு வந்தது.

 

2. சுக்கோத்

·        எபிரேயர்கள் முதலில் பாளயமிறங்கிய இடத்தைவிட்டு பயணப்பட்டபோது கர்த்தர் பகலில் மேகஸ்தம்பத்திலும், இரவில் அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார் (யாத்.13:20-22)

·        தேவன் அவர்களை ஒரு காரணத்திற்காக நீண்ட பயணப்பாதையில் நடத்தினார்.

·        யாத்.13:17-18 பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.

 

புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

 

3. ஏத்தாம்

·        சுக்கோத்-திலிருந்து ஏத்தாமிற்கு

·        யாத்.13:20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.

 

4. ஈரோத்

·        மிக்தோலுக்கும் சிவந்த சமுத்திரத்திற்கும் இடையே பாளயமிறங்குதல் (யாத்.14:2)

·        சிவந்த சமுத்திரத்தை கடத்தல்

·        எகிப்திய சேனைகள் அழிக்கப்படல்.

 

5. சூர் வனாந்தரம் (யாத்.15:22-23)

·        மாராவின் கசந்த நீர் மதுரமாய் மாறுதல்.

 

புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

 

6. ஏலிம் (யாத்.15:27)

·        இஸ்ரவேலர் 12 நீருற்றுக்கள், 70 பேரீச்சமரங்கள் நடுவில் பாளயமிறங்குதல்.

 

7. சீன் வனாந்தரம் (யாத்.16:1)

·        உணவுக்காக மன்னாவும், காடைகளும் வழங்கப்படுதல்.

 

8. ரெவிதீம் (யாத்.17:1)

·        கன்மலையிலிருந்து தண்ணீர் உண்டாதல்.

·        இஸ்ரவேல் அமலேக்கியரோடு யுத்தம் செய்தல். (யாத்.17:8-16)

 

புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

 

9. சீனாய் மலையும், வனாந்தரமும் (யாத் 19:1-2)

·        எகிப்தைவிட்டு புறப்பட்டு 3ம் மாதம் இங்கு சேர்ந்தார்கள்.

·        சீனாயில் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்.

·        மோசேயைக் கொண்டு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.

·        ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது.

·        1வது மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டது.

 

யாத்திராகமத்தின் முக்கியத்துவம்

1. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றபடும் செயல் ஆரம்பிக்கும் இடம் யாத்திராகமம்.

·        ஆதியாகமத்தில் தேவன் ஆபிரகாமிற்கு அவனது சந்ததியார் பலம்மிக்க தேசமாகவும், கானான் தேசத்தை சுதந்தரிப்பவர்களாகவும், அவர்களால் உலகம் முழுவதும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் என்றும் வாக்களித்திருந்தார்.

·        யாத்திராகமத்திலிருந்துதான் வேதாகமத்தின் சம்பவங்கள் விறுவிறுப்பாக நடந்தேறுகிறது.

2. தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்பட்டது

·        எகிப்தின் கசப்பான கொத்தடிமை வாழ்வும், துன்பமும் இஸ்ரவேலருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்திருந்தது.

·        ஆனால் தேவனோ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்தியினராகிய இவர்களை தமது ஓங்கிய புயத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும் 10 ஒப்பிடமுடியாத அதிசயங்களை எகிப்தியர், இஸ்ரவேலர் காணும்படி செய்து அவர்களை விடுவித்தார்.

 

யாத்திராகமத்தின் முக்கியத்துவம்

 

3. தேவனுடைய ஜனங்களை வனாந்தரத்தில் தயார்ப்படுத்துதல்

 

·        ஆதியாகமத்தில் தேவன் ஒரு குடும்பத்தினரோடு செயல்படுகிறார். ஆனால் யாத்திராகமத்தில் தேவன் ஒரு முழு தேசத்தோடும் செயற்படுகிறார்.

·        யாத்திராகமம் முழுவதும் தேவன் இஸ்ரவேலை தமது ஜனமாக்கும் முயற்சியின் விபரிப்பு

·        இப்போது அவர்கள் அவருடைய ஜனங்கள், அவர் அவர்களுடைய தேவன்

·        அவர்களுக்கு அவர் பத்து கற்பனைகளை கொடுத்தபோது இஸ்ரவேல் ஜனத்திற்கும் தனக்குமான உறவை உறுதியாக குறிப்பிடுகிறார். யாத் 20:2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

·        அவர்களது நம்பிக்கைகள், நடத்தைகள், வழிபாடுகளுக்கான அடிப்படைகளை அவர் அவர்களுக்கு அளித்தார்.

·        இந்த நியாயப்பிரமாணத்தின் மூலமாக வாழ்வின் சகலமும் தேவனோடு சம்பந்தப்பட்டது என்பதை தெரிவிக்கிறார்

·        அவரது ஆளுகைக்கு உட்படாதது எதுவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார்.

·        இப்போது அவரது பிரசன்னம் அவரது ஜனங்கள் மத்தியில் இருக்கும்.

·        ஆசரிப்புக்கூடாரம் என்னும் கூடாரத்தை அமைக்க விரிவான விளக்கங்கள் கொடுக்கப்படுதல்.

·        இஸ்ரவேல் மத்தியில் வாசம்பண்ண நோக்கம் கொண்டு அவரது மகிமையை மேகத்தால் வெளிப்படுத்துதல் (யாத் 40:34-35)

 

யாத்திராகமத்தின் முக்கியத்துவம்

 

கிறிஸ்துவுக்கும் அவரது நற்செய்திக்கும் முன்னோடியானவை

 

·        தேவனின் பஸ்காவின் ஆடு (12:1-28)

·        புளிப்பில்லா அப்பம் (13:3-10)

·        கன்மலை, வழிநடத்திய மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் (13:21-22)

·        வானத்திலிருந்து வந்த மன்னா (16:1-36)

·        ஜீவத்தண்ணீரின் ஊற்று (17:1-7)

·        ஆசரிப்புக் கூடாரம் (25-40)

·        சிவந்த சமுத்திரத்தின் ஞானஸ்நானம்

 

எனது எண்ணங்கள்

 

·        யாத்திராகமம் 400 ஆண்டுகள் கால இடைவெளிக்கு பின்பாக இஸ்ரவேலரின் வரலாற்றை தொடர்கிறது.

·        இது மல்கியாவின் புத்தகத்திற்கும் மத்தேயு நற்செய்தி நூலுக்கும் இடையேயான 400 ஆண்டுகளக்கு ஒத்தது.

·        ஆதியாகமத்திற்கும், யாத்திராகமத்திற்கும் இடையான 400 ஆண்டுகள் காலப் பகுதியில் இஸ்ரவேல் ஜனங்கள் சொல்லொணா துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார்கள்.

·        அது அவர்களை அடிமைப்படுத்திய எகிப்திய ஆட்சியாளர்களால் நேர்ந்தது. ஆனால் இரண்டு ஏற்பாடுகளுக்கிடையே நடந்த அடிமைத்தனம் யூத ஜனங்களின் மத அடிப்படைவாத அமைப்பினால் வந்தது.

·        அவர்கள் கண்ணிருந்தும் காணாமலும், காதிருந்தும் கேளாமலும் அவர்கள் இருதயங்கள் இருளடைந்திருந்தது.

 

எனது எண்ணங்கள்

 

·        யாத்திராகமத்தில் ஜனங்கள் விடுதலைக்காக தேவனை நோக்கி கதறினார்கள்.

·        அதுபோல சிமியோன், அன்னாள் போன்றவர்கள் தேவனுடைய இரட்சிப்பிற்காக தேவனை நோக்கி ஜெபித்து காத்திருந்தார்கள்.

·        தேவன் அவர்களது கதறுதலை கேட்டு எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க மோசேயை எழுப்பினார்.

·        அதுபோல பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் இயேசுவை எழுப்பினார்.

·        மோசே பிறந்தபோது எபிரேய ஆண்குழந்தைகள் எகிப்தியரால் கொல்லப்பட்டார்கள்.

·        இயேசு பிறந்தபோது எபிரேய ஆண்குழந்தைகள் ஏரோதினால் கொல்லப்பட்டார்கள்.

·        மோசேயும், இயேசுவும் குழந்தைகளாக இருந்தபோது எகிப்தில் பாதுகாக்கப்பட்டார்கள்.

·        மோசேயும், இயேசுவும் தமது சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டார்கள்.

·        மோசேயும், இயேசுவும் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தார்கள்.

 

எனது எண்ணங்கள்

 

·        மோசே விண்ணப்பம்பண்ணி இஸ்ரவேலருக்கு உணவும், தண்ணீரும் கொடுத்தார்.

·        இயேசுவோ வானத்திலிருந்து வந்த உணவும், ஜீவத்தண்ணீமானவராயிருந்தார்.

 

·        இருவருமே மலைமீது மரணித்தார்கள்.

 

·        மரித்த மோசேயை அடக்கம் செய்த தேவன்,

·        இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச்செய்தார்.

 

எனது எண்ணங்கள்

 

·        நமது வாழ்க்கையும் ஒரு பயணமே.

·        தேவன் இல்லாமல் நமது வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளவோ, அசையவோ முடியாது.

·        தேவன் நமக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.

·        தேவன் வாக்குத்தம் செய்கிறவர்.

·        தேவன் தமது வல்லமையை வெளிப்படுத்துகிறவர்.

·        தேவன் வழிகளை வாய்க்கப் பண்ணுகிறவர்.

·        தேவன் நமது தேவைகளை நிறைவேற்றுகிறவர்.

·        தேவன் தமது வாக்குத்தத்தின் பலன்களை தருவதற்கு முன் நம்மை ஆயத்தப்படுத்துகிறவர்.

·        தேவன் நம்மேல் மனதுருக்கமுடையவர் ஆகவே நம்மை கைவிடமாட்டார்.

Comments

Popular posts from this blog

Tamil Christian Songs

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

இயேசு என்ற திருநாமத்திற்கு